2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய காப்புறுதி தினமொன்றை பிரகடனப்படுத்துதல் - காப்புறுதியின் முக்கியத்துவம் பற்றி இலங்கை மக்களுக்கு அறியச் செய்வித்து சகல குடும்பங்கள் சார்பிலும் ஆரம்ப காப்புறுதி காப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களில் நிகழும் மரணங்கள், நோய் வாய்ப்படுதல் மற்றும் சொத்துக்களின் இழப்பு போன்றவற்றை தழுவும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதியை "தேசிய காப்புறுதி தினம்" ஆக பிரகடனப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |