2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நகரங்களுக்கிடையிலான தொடர்பு பாதைகளை மேம்படுத்துதல் - மேல் மாகாணத்தில் நிலவும் வாகன நெரிசலை குறைப்பதற்கும் பிராந்திய போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நகர பிரதேசங்கள் சம்பந்தமாக செய்யப்படும் வீதி (தொடர்புபாதைகள்) அபிவிருத்தி அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தற்போது மிக சேதமடைந்த நிலையில் உள்ளதன் காரணமாக மிக கஷ்டத்தின் மத்தியில் வாகன போக்குவரத்து செய்யப்படும் கொழும்பு, மொரட்டுவை, மஹர மற்றும் அவிஸ்சாவெல ஆகிய பிரதேசங்களிலுள்ள 30 கிலோ மீற்றர் நீளமான 26 நகரங்களுக்கு இடையிலான தொடர்பு பாதைகளை 208.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (மேல் மாகாணம்) ஊடாக காப்பட் இட்டு விருத்தி செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |