2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலிஸ் விசேட படையணியைச் சேர்ந்த படைவீரர்கள் சார்பில் தங்குமிட வசதிகளை விருத்தி செய்தல் - இலங்கை பொலிஸ் விசேட படையணியின் கீழ் கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த பிரதேசங்களில் விசேட கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு போதுமான தங்குமிட வசதிகள் இல்லாமை பிரச்சினையொன்றாக நிலவுகின்றது. இதற்கு மாற்று வழியாக கொழும்பு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோணஹேண முகாம் மனையிடத்தில் சேதமடைந்த நிலையிலுள்ள இராணுவ வீரர்களின் வீடொன்றை அப்புறப்படுத்தி அதற்குப் பதிலாக 250 உத்தியோகத்தர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்பாடு செய்யக்கூடிய மூன்று மாடிகளைக் கொண்ட இராணுவ வீரர்களுக்கான வசிப்பிட கட்டடமொன்றை 74.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |