• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நில அமிழ்வு
- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அச்சுவேலி பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் செய்யப்பட்டு வரும் காணிகள் அமிழ்ந்து செல்லும் நிகழ்வுகள் அறிக்கையிடப்பட்டுள்ளதோடு, நிலத்தின் மீது நீண்டகாலமாக நிகழ்ந்த வெடிப்புகள் அதிகரிக்கும் நிலைமையும் காணக்கிடைக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் நிலமானது சுண்ணாம்பு கற்களினால் உருவாகியுள்ளமையினால், துளைகள் அல்லது சுரங்கங்கள் உருவாகும் சாத்தியமும் நிலவுகின்றது. இந்த நிலைமைக்கு ஏதுவாய் அமைந்த காரணங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விதத்தில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய நில அமிழ்வுகள் பற்றியும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பிரதேசத்திலுள்ள காணிகளின் பயன்பாடு சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கும் இயலுமாகும் வகையில் தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பின் ஊடாக இந்த நிலைமை பற்றி மேலும் ஆராயும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.