2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஊடக உரிமைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடலொன்றை ஆரம்பித்தல் - சுதந்திரமானதும் சுயாதீனதுமான நானாவித ஊடக கலாசாரங்களைப் பாதுகாத்து தரம்மிக்க செய்திகளை பொதுமக்களுக்கு வழங்கும் தொழில் ரீதியானதும் ஒழுக்க நெறியினை மேம்படுத்து வதனையும் நோக்காகக் கொண்டு அச்சு ஊடகம், இரத்திரனியல் ஊடகம் மற்றும் நாட்டில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களும் செய்திகள் சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரம் மற்றும் முறைகளுக்கு அமைவாக ஒழுங்குறுத்துவதற்காக சுயாதீன சபையொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்பினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துகளையும் பிரேரிப்பு களையும் முறையாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |