• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்துதல்
- நாடுகடந்து நிகழும் குற்றங்களை தடுக்கும் போது இலங்கையின் ஒத்துழைப்பினை வேறு நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் அந்த நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்குமாக 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பணம் வௌ்ளையாக்கல் பற்றிய குற்றங்களை இனங்காணுதல், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் 16 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள இலஞ்சம் பெறுவதற்குரியதான பிழைகள் குற்றங்களாக காட்டும் தேவை, கணனி முறைமைகள் மற்றும் தரவுகள் தொடர்பிலான குற்றங்கள் போன்ற இந்த துறைக்குரியதாக அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ள நிலைமைகள் போன்றவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நாடுகடந்த குற்றங்களை தடுப்பதற்கும் குற்றங்களை தடுப்பதனை பலப்படுத்துவதற்கும் குற்ற புலனாய்வுகளைச் செய்வதற்கும் குற்றங்களின் மூலம் ஈட்டிய பணங்களை அரசுடமையாக்குவதற்கும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது சம்பந்தமாக இலங்கைக்குள்ள சருவதேச கடப்பாட்டினை எடுத்துக் காட்டி குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.