2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தி கருத்திட்டம் - உயர் தரம் வாய்ந்த விதை மற்றும் நடுகைப் பொருட்கள் இலகுவாகக் கிடைக்கச் செய்வதன் மூலம் பெறக்கூடிய அறுவடையின் தரம் மற்றும் பயனை அதிகரித்துக் கொள்ளமுடியுமென விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டில் கமத்தொழிலின் நிலைபேறுடையதான உணவு பாதுகாப்பினை அடைவதற்கும் உயர்தரத்திலான விதை மற்றும் நடுகைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் கருத்திட்டத்தை கமத்தொழில் அமைச்சினதும் அதன்கீழ் உள்ள நிறுவனங்களுக்கு உரிய தற்போது பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை உபயோகப்படுத்தி அரசாங்கத்துறையினதும் தனியார்துறையினதும் கூட்டு தொழில்முயற்சியின் மீது நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |