• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தரத்தில் உயர்ந்த ஆயுள்வேத மூலிகை மூலப்பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மூலிகை செய்கை கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துதல்
- உள்நாட்டு மற்றும் ஆயுள்வேத மருந்துப் பொருள் உற்பத்திக்காக வருடாந்தம் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தேவையிலிருந்து சுமார் 60 சதவீதம் பெற்றுக் கொள்ளப்படுவது இறக்குமதியின் மூலமாகும் இதற்கு மாற்று வழியொன்றாக மூலிகை மூலப்பொருட்களின் கேள்வியினை ஈடுசெய்வதற்காக குறுகியகால மூலிகை செய்கையை ஆரம்பிப்பதற்கு 2016 ஆம் ஆணடிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. இதற்கமைவாக கமக்காரர் பங்களிப்புடன் தரத்தில் உயர்ந்த மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான மூலிகைச் செய்கை கருத்திட்டமொன்றை இரத்தினபுரி, குருநாகல், அநுராதபுரம், மொனராகலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி ஆரம்பிப்பதற்கும் இலங்கை ஆயுள்வேத மருத்துப் பொருள் கூட்டுத்தாபனத்தின் விற்பனை முறைமையூடாக இந்த கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மூலிகை மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.