• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை டிஜிட்டல் சுகாதார புத்தாக்க மற்றும் வர்த்தக மயப்படுத்தல் நிறுவனத்தை தாபித்தல்
- மரபணு விஞ்ஞான மருத்துவ முறை மற்றும் தகவல் தொலைத்தொடர்பாடல் தொழிநுட்பம் என்பவை "டிஜிட்டல் சுகாதாரம்" என அழைக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு உயர்தரத்திலான சேவையை வழங்குவதற்கு இயலுமாதல், உயர் பெறுபேறுகளை கிடைக்கப் பெறச் செய்தல் மற்றும் குறைந்த செலவு போன்ற காரணங்களினால் அது சுகாதார பாதுகாப்புத் துறையின் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது. டிஜிட்டல் சுகாதார துறைக்கு செய்யப்பட்ட உலகளாவிய முதலீடுகளின் அளவு கடந்த காலப்பகுதியில் துரித வளர்ச்சியை காட்டி நிற்கின்றதோடு, சுகாதார துறையின் எதிர்காலம் சுகாதார பாதுகாப்பு டிஜிட்டல் புத்தாக்கத்தின் மீது தங்கியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் இலங்கைக்கு உச்சப்பயனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நவீன டிஜிட்டல் மற்றும் மரபணு தொழினுட்ப பாவனையின் மூலம் உயர்தரத்திலான புத்தாக்கங்களுக்கு வலுவூட்டுவதற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுடன் ஒத்துழைப்பினை கட்டியெழுப்பக்கூடியவாறு "இலங்கை டிஜிட்டல் சுகாதார புத்தாக்க மற்றும் வர்த்தகமயப்படுத்தல் நிறுவனத்தை" அரசாங்க தனியார் பங்களிப்புடன் தாபிக்கும் பொருட்டு, விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.