2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய தரக் கொள்கை - இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காகவுள்ள முதலாவது தரக் கொள்கையானது 1998 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரந்துபட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பிலான அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் எபன்வற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சுகாதாரம், கல்வி, வீதி, போக்குவரத்து மற்றும் வர்த்தக, வாணிபம் ஆகிய துறைகளைத் தழுவும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கோரல்களின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களின்பால் கவனத்தை செலுத்தியும் விரிவான / பலம்மிக்க பங்களிப்பு அணுகலை பின்பற்றி புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய தரக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |