• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செல்லுபடியாகும் பயணிகள் சேவை உரிமப்பத்திரமின்றி பேருந்தினை சேவையில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக நிர்ணயிக்கப்படும் தண்டப்பணத்தை அதிகரித்தல்
- பயணிகள் பேருந்து சேவையின் தரத்தை விருத்தி செய்வதற்கும் பயணிகள் முகங்கொடுக்கும் ஆபத்துமிக்க நிலைமைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் உரிய அனுமதியின்றி பயணிகள் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை கடுமையாக்கும் தேவையானது எழுந்துள்ளது. இதற்கமைவாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் பயணிகள் சேவை உரிமப்பத்திரம் இன்றி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றமொன்றின் மூலம் தற்போது நிர்ணயிக்கப்படும் ஆகக்குறைந்த தண்டத் தொகையை 10,000/- ரூபாவிலிருந்து 200,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 40 ஆம் பிரிவைத் திருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள "தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை" அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.