• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மாணிக்க கல் படிமங்களின் அகழ்வும் மதிப்பீடும்
- இலங்கையின் நிலப்பிரதேசத்தின் சுமார் 70 சதவீதமான பிரதேசத்தில் மாணிக்ககல் வளமானது பரந்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் தற்போது மாணிக்கக் கல் அகழ்விற்காக பயன்படுத்தப்படுவது அதில் 10 சதவீதத்திற்கும் குறைந்த நிலப்பிரதேசமாகும். இதுவரை அறிந்து கொள்ளப்படாத மாணிக்கக்கல் படிமங்கள் உள்ள இடங்களை இனங்கண்டு வரைபடத்துடன் கூடிய விரிவான தரவுக் களஞ்சியமொன்றை அறிமுகப்படுத்துவதனையும் சூழல் நட்புறவுமிக்க மாணிக்கக்கல் அகழ்வுகளுக்காக சரியான முறைகளை அறிமுகப்படுத்துவதனையும் நிலைபேறுடைய மாணிக்கக்கல் அகழ்வு கைத்தொழிலுக்கு வழிகாட்டல்களை வகுத்தமைப்பதனையும் நோக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள "இலங்கையில் மாணிக்க கல் படிமங்களின் அகழ்வு மற்றும் மதிப்பீடு செய்யும் கருத்திட்டத்தை" 2017 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.