• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்லுதல்
- ஊழல் தடுப்பு நிறுவன கட்டமைப்பை மீளமைப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, ஐக்கிய இராச்சியத்தின் "பாரிய மோசடிகள் தொடர்பிலான அலுவலகத்துக்கு" ஒத்த முழுமையாக அதிகாரமளிக்கப்பட்ட பாரிய மோசடிகள் தொடர்பிலான அலுவலகமொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஊழல் தடுப்பு தொடர்பிலான புதிய நிறுவன கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தும் வரைக்கும் பாரிய மோசடி மற்றும் ஊழல் சம்பந்தமான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்கும் உரிய புலனாய்வுப் பணிகளுக்கு வசதியளிப்பதற்குமாக 2015 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட ஊழல் தடுப்பு செயலகத்தின் செயற்பாட்டு பணிகளை தொடர்ந்தும் நடாத்திச் செல்லும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.