2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அங்கவீனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை திருத்துதல் - 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அங்கவீனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் இலங்கையில் வசிக்கும் அங்கவீனமுற்ற சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டக் கட்டமைப்பாக செயற்படுத்தப்படுகின்றது. இலங்கையில் அங்கவீனமுற்றவர்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயமானது 2016 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதியிலிருந்து வலுவாக்கம் செய்யப்பட்டது. இந்த சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொதுவான மூலதத்துவங்கள் அடங்கலாக 30 உரிமைகள் இலங்கையில் பாதுகாப்பதற்கும் மேற்போந்த சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட "தேசிய சபை" என்பதற்குப் பதிலாக சுயாதீனமான ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதன் மூலம் அங்கவீனமுற்றவர்களுக்கு மிக விரிவான சேவையினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அங்கவீனமுற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை திருத்தும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |