2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மகாவலி பொருளாதார வலயங்களை மீள் புதுப்பிக்கதக்க சக்தி உற்பத்திக்காக பயன்படுத்துதல் - காலநிலை மாற்றம் பற்றி ஐக்கிய நாடுகளின் கட்டமைக்கப்பட்ட சமவாயத்தின் உறுப்பு நாடொன்றாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைக்கும் போது வலுசக்தி உற்பத்தி துறையானது பிரதான பங்களிப்பை வகிக்கின்றது. இதன் போது டீசல் மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள் பயன்படுத்தப்படும் அனல் மின் நிலையங்களுக்குப் பதிலாக காற்று, நீர் மின்சாரம் மற்றும் சூரிய சக்தி போன்ற மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியை பயன்படுத்தும் தேவை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான மகாவலி பொருளாதார வலயங்களில் அமைந்துள்ள கமத்தொழில் செய்கைகளின் பொருட்டு பயன்படுத்த முடியாத காணிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் போன்றவற்றை இனங்கண்டு அவற்றில் மிதக்கும் சூரிய சக்தி உற்பத்தி கூறுகள் அடங்கலாக மிகச் சிறந்த சுற்றாடல் நட்புறவுமிக்க மீள் புதுப்பிக்கத்தக்க தோற்றுவாய்களின் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங் களைத் தாபிப்பதற்கு கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்குவதற்கும் அதற்குப் பொருத்தமான வழிமுறையொன்றை முன்மொழியும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |