2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையிலான நாடுகடத்தல் உடன்படிக்கை - குற்றங்களை தடுக்கும் போதும் கட்டுப்படுத்தும் போதும் இருநாடுகளுக்கும் இடையில் பயனுள்ள ஒத்துழைப்பினை உருவாக்கிக் கொள்வதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களை / குற்றவாளிகளை உரிய நாட்டிற்கு நாடுகடத்துவது சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு வசதியளிக்கும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையிலான நாடு கடத்தல் பற்றிய உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |