2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிருமாணிப்பு பற்றிய தேசிய கொள்கை - தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் நிருமாணிப்பு கைத்தொழில்துறை நாட்டின் பிரதான தொழில் வழங்கும் துறையொன்றுமாகும். நிருமாணிப்பு கைத்தொழில் சார்ந்த சகல தரப்பினர்களுக்கும் திறமுறை தலைமைத்துவத்தை வழங்குதல், நிலைபேறுடைய அபிவிருத்தி - மறுசீரமைப்பு மற்றும் விருத்திகளை ஊக்குவித்தல், குறைந்த செலவு மற்றும் சுற்றாடல் நட்புறவுமிக்க தொழினுட்பம் / கட்டட பொருட்கள் உட்பட முறைமைகளை மேம்படுத்துதல், பொருத்தமான ஆராய்ச்சி மேம்பாடு, ஆராய்ச்சி பணிகளின் விளம்பரமும் வெளிப்படுத்தல்களும், தரம் / ஒழுக்கநெறி, குறிக்கோள்களை தயாரித்தல் மற்றும் வெளிநாடுகளில் நிருமாணிப்பு சேவைகளில் ஈடுபடுவதனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிருமாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் நிருமாணிப்பு பற்றிய தேசிய மதியுரை குழுவினால் தயாரிக்கப்பட்ட "நிருமாணிப்பு பற்றிய தேசிய கொள்கை" மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறிமுறை ஆகியவற்றை அங்கீரிக்கும் பொருட்டு பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |