2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரண்டு பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களை மாத்தறையிலும் யாழ்ப்பாணத்திலும் தாபித்தல் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இரண்டு பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களை மாத்தறை மற்றும் வவுனியா பிரதேசங்களில் தாபிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் கொன்சியூலர் உதவிகளை எந்நேரமும் கோரும் வட மாகாணத்தின் பெரும்பாலானோர் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் என வட மாகாணத்தின் அரசியல் அதிகாரபீடங்களினால் செய்யப்பட்டுள்ள விடய முன்வைப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வட மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு கொன்சியூலர் சேவைகளை வழங்கும் நோக்கில் வவுனியா பிரதேசத்தில் தாபிக்கப்படவிருந்த பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை யாழ்ப்பாணம் பிரதேசத்தில் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |