• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ஏழு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்கும் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, கட்டடம் சரியும் ஆபத்தினை எதிர்நோக்கியிருந்த இந்தக் கல்லூரியின் ஐந்து (05) மாடிகளைக் கொண்ட "முவர் கட்டடத்தை" அப்புறப்படுத்தி அதற்குப் பதிலாக ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இதற்குரிய ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.