2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கு கறுவா இறக்குமதி செய்வதை தடைசெய்தலும் பலசரக்கு மீள் ஏற்றுமதி விதிமுறையை திருத்தியமைத்தலும் - இலங்கை கறுவாவில் காணப்படும் தனித்தன்மை, வாசம், சுவை மற்றும் வர்ணம் என்பன காரணமாக சர்வதேச சந்தையில் அது நீண்டகால நற்பெயரை கொண்டுள்ளது. ஆயினும், பல்வேறுபட்ட நாடுகளிலிருந்து கறுவா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யும் நிகழ்வுகள் அண்மைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இது இலங்கை கறுவாவிற்கு (Ceylon Cinnamon) சர்வதேச ரீதியில் உள்ள நற்பெயருக்கு பிரதிகூலமான விதத்தில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு உலகின் வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு கறுவா இறக்குமதி செய்வதைத் தடை செய்வதற்கும். இலங்கை துறைமுகங்களின் ஊடாக பலசரக்கு மீள் ஏற்றுமதி செய்யும் முறையை மீளாய்வு செய்யும் முக்கியத்துவத்தைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள "ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகமாக இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கும் திட்டம்" என்பதை திருத்துவதற்கும் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குமாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |