2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேராதனை பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் கருத்திட்டம் - உள்நாட்டு அதேபோன்று வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பாரிய மக்கள் தொகையைக் கொண்டதும் துரிதமாக மக்கள் சேவைகள் தேவைப்படுகின்றதுமான இடமொன்றில் அமைந்துள்ள பேராதனை பொலிஸ் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் 2008 ஆம் ஆண்டிலே ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டாலும் பல்வேறுபட்ட காரணங்களினால் இந்தப் பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதற்கமைவாக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற பூரணத்துவம்மிக்க பொலிஸ் நிலையமொன்றாக பேராதனை பொலிஸ் நிலையத்தை நிருமாணிக்கும் கருத்திட்டத்தை 141 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |