• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தேகம, வனாத்தவில்லுவ, மீகஹதென்ன மற்றும் கட்டுபொத்த ஆகிய பொலிஸ் நிலையங்களை நிருமாணித்தல்
- இலங்கை பொலிஸ் ஊடாக வினைத்திறன் மிக்க சேவையொன்றை பொது மக்களுக்கு வழங்கும் நோக்கில் புதிய வசதிகளுடன் கூடிய பொலிஸ் நிலையங்களை நிருமாணிக்கும் வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 2017 ஆம் ஆண்டளவில் செய்து முடிக்கத்தக்கவாறு தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக வாடகைக்கு எடுத்த கட்டடங்களில் அல்லது மிகப் பழைய கட்டடங்களில் நடாத்திச் செல்லப்படும் பத்தேகம, வனாத்தவில்லுவ, மீகஹதென்ன மற்றும் கட்டுபொத்த ஆகிய பொலிஸ் நிலையங்களுக்காக 370.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் புதிய கட்டடங்களை நிருமாணிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.