2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டில் இடம்பெயர்ந்து நலனோம்பல் முகாம்களில் தங்கியுள்ள காணியற்ற குடும்பங்களை மீள குடியமர்த்துதல் - நலனோம்பல் முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெர்ந்த குடும்பங்களை மீள குடியமர்த்தும் பணிகள் துரிதமாக பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் நலனோம்பல் நிலையங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 971 குடும்பங்கள் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றன. இதில் 682 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாவதோடு, இவர்களுள் 462 குடும்பங்கள் மாற்றுக் காணிகளில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோதிலும் மேலும் 220 குடும்பங்களை குடியமர்த்துவதற்கு காணிகள் கண்டறியப்பட வேண்டும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரசாங்க காணிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றமையினால், இந்த 220 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்காக குடும்பமொன்றுக்கு 20 பேர்ச்சர்ஸ் வீதம் தனியார் காணிகளை கொள்வனவு செய்வதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான தனியார் காணிகளை யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் ஊடாக கொள்வனவு செய்யும் பொருட்டு 88 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |