2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கட்டான நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளல் - கட்டான பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு குழாய் நீர் வழங்குவதன் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில் கட்டான நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியினை ஏற்பாடு செய்து கொள்வதற்கு சீன அபிவிருத்தி வங்கியுடனும் இலங்கை வங்கியுடனும் கடன் உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|