• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கரையோர பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துவதற்காக புதிய சட்டமொன்றைத் தயாரித்தல்
- 2009 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகள் இந்த திணைக்களத்தின் தற்போதைய தாபன கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்துவது கடினமானதென இனங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நடைமுறைத் தேவைகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த திணைக்களத்தை கரையோரப் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமொன்றாக பலம்மிக்கதாக தாபிக்கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க கரையோர பாதுகாப்பு திணைக்கள சட்டத்தை இல்லாதொழித்து புதிய சட்டமொன்றை வரையும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.