• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாண கால்வாய் நிருமாணிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- 12,500 ஹெக்டயார் வயற் காணிகளுக்கு நீர் பாய்ச்சல் செய்யும் நோக்கில், மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் முதலாம் கட்டத்தின் கீழ் வாமடில்ல இடதுகரை பிரதான கால்வாயை நாபெடகஹவத்த நீர் தேக்கம் வரை 5.25 கிலோ மீற்றர் நீளம் அபிவிருத்தி செய்வதற்கும் வாமடில்ல குளத்தில் புதிய மதகை நிருமாணிப்பதற்கும் இந்தப் புதிய மதகிலிருந்து வாமடில்ல இடதுகரை பிரதான கால்வாய் வரை கால்வாய் ஒன்று 600 மீற்றர் நீளத்தில் நிருமாணிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.