• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இஹல - எலஹர கால்வாய் நிருமாணிப்பு
- வடமத்திய மாகாணத்திற்கு நீர் வழங்குவதை நோக்காகக் கொண்டு, மகாவலி நீரை பாதுகாக்கும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இஹல - எலஹர கால்வாய் பாதையை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் இஹல - எலஹர கால்வாயை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 3.254 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டின் கீழ் இஹல - எலஹர கால்வாயை 6.2 கிலோமீற்றர் நீளத்திற்கு தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.