• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தீயினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி சந்தைக் கடைகள் சார்பில் நட்டஈடு வழங்குதல்
- 2016‑09‑16 ஆம் திகதியன்று கிளிநொச்சி மாவட்ட பொது சந்தையில் ஏற்பட்ட தீ காரணமாக 122 கடைகள் சேதமடைந்தன . இதனால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் உரிய சேதங்களை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தீயினால் சேதமடைந்த 122 கடைகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வர்த்தகர்களுக்கு 74 மில்லியன் ரூபாவைக் கொண்ட நட்டஈட்டுத் தொகையொன்றை வழங்குவதற்கும் நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு முறைமையொன்றை 97 மில்லியன் செலவில் கிளிநொச்சி மாவட்டத்தில் தாபிப்பதற்கும். தீயினால் சேதமடைந்த வர்த்தக நிறுவனங்களைத் தாபிப்பதற்காக 150 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிரந்தர பொது வர்த்தக கடைத்தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.