2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முறையான கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டமொன்றின் அரசாங்க நிறுவனங்களில் சேரும் கழிவுகளை வேறுபடுத்தி அப்புறப்படுத்துதல் - மனித செயற்பாடுகள் காரணமாக திரளும் கழிவுகளை முறையற்ற விதத்தில் சுற்றாடலில் இடுவது தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வொன்று வழங்கும் பொருட்டிலான ஆரம்ப நடவடிக்கையொன்றாக அமைச்சுக்களிலும் அவற்றின் கீழுள்ள சகல நிறுவனங்களிலும் சேரும் கழிவுப் பொருட்கள் உக்கிப்போகும் மற்றும் உக்கிப்போகாத கழிவுகளாக பிரித்து உரிய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு முறையாக கையளிப்பதற்கு அரசாங்க நிறுவனங்களில் வழிமுறையொன்றை திட்டமிடுவதற்கும் அதற்குத் தேவையான பணிகளை செய்வதற்காக அமைச்சர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்குமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மாண்புமிகு பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |