2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புலம்பெயர் ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டம் - வெளிநாடுகளில் தொழில்புரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய முறையொன்றை பிரேரிக்கும் பொருட்டு உரிய பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று 2015 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. இதற்கமைவாக இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள "புலம்பெயர் ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டம்" நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான சட்டங்களை வரைவதற்கும் பொருத்தமானவாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை திருத்துவதற்குமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |