2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தண்டனைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் - (குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையை அதிகரித்தல்) - இலங்கையில் நடைமுறையிலுள்ள குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக்குறைந்த வயதெல்லையாக உள்ள எட்டு வயதானது மிகக்குறைந்த வயதெல்லை என்பது மனநல மருத்துவர்களினதும் உரிய துறைசாந்த நிபுணர்களினதும் கருத்தாகும். இதற்கமைவாக, 12 வயதிற்குக்குறைந்த சிறுபிள்ளை ஒருவரினால் குற்றமொன்று புரியுமிடத்து, உரிய குற்றத்தைப் புரிந்த சிறுபிள்ளைக்கு தண்டனை விதிக்கக்கூடாதெனவும் 12 வயதிற்கு மேல் 14 வயதிற்குக்குறைந்த சிறுபிள்ளை சம்பந்தமானவிடத்து, குற்றஞ் சாட்டப்பட்டுள்ள தவறைப் புரிவதற்குப் போதுமான எண்ணத்தை கொண்டிருப்பதற்கான அறிவு குறித்த சிறுபிள்ளைக்கு உள்ளதென நீதவானின் கருத்தாக இருந்தால் மாத்திரம் உரிய தவறுக்கு தண்டனை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காகவுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |