• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அறக்கொடை நம்பிக்கை நிதியமொன்றைத் தாபித்தல் - இலங்கை பௌத்த யாத்திரிகர் ஓய்வு மண்டபம்
- இந்தியாவிற்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிடவசதிகளை வழங்கும் புதுதில்லியிலுள்ள "இலங்கை பௌத்த யாத்திரிகர் ஓய்வு மண்டபம்" பண்டிதர் ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் பிரதம அமைச்சராக இருந்த காலத்தில் அண்ணாரினால் இலங்கை அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு மண்டபம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கு அமைவாக பயன்படுத்தப்படுகின்றதென்பதை உறுதிப்படுத்துவதற்கும் சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் நடாத்திச் செல்வதற்கும் யாத்திரிகர்களுக்கு உயர்தரத்திலான தங்குமிடவசதிகளை இதன்மூலம் வழங்குவதற்கும் இதிலிருந்து ஈட்டப்படும் வருமானத்தை அற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் அறக்கொடை நம்பிக்கை நிதியமொன்றை நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தாபிக்கும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.