2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தலங்கம பொலிஸ் நிலையத்தைத் தாபிப்பதற்காக பத்தரமுல்லை, பாராளுமன்ற வீதியிலுள்ள காணித் துண்டொன்றை குறித்தொதுக்குதல் - தலங்கம பொலிஸ் நிலையத்தின் மூலம் 240 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தழுவி சுமார் 170,000 பொது மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றது. இந்த பொலிஸ் நிலையம் பிரதான வீதியிலிருந்து உட்செல்லும் துணை வீதியொன்றில் 44 பேர்சஸ் விஸ்தீரமான காணித்துண்டொன்றில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்துகொண்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அதேபோன்று அங்கு சேவையை நாடிவரும் பொது மக்களுக்கும் பல்வேறுபட்ட கஸ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிநேரிட்டுள்ளது. ஆகவே தலங்கம பொலிஸ் நிலையத்தைத் தாபிப்பதற்காக பத்தரமுல்லை, பாராளுமன்ற வீதியில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 1 ஏக்கர் காணித் துண்டை சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சுக்கு குறித்தொதுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |