2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
"முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கான திறன்கள் நிகழ்ச்சித்திட்டம்" சார்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இடையில் துணை ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுதல் - அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இளைஞர்களுக்கு தரம்மிக்க திறன் அபிவிருத்தி கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சுற்றுலாத்துறை தொழில்களுக்குத் தேவையான தேர்ச்சியினைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சினால் 2016 - 2019 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் வௌிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் மூலம் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதி நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இடையில் துணை ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |