2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாத்தறை பொது மருத்துவமனையில் தாய், சேய் பிரிவுகளை அபிவிருத்தி செய்தல் - மாத்தறை பொது மருத்துவமனையின் மூலம் மாத்தறை மாவட்டத்தினுள் இருக்கும் வதிவு நோயாளர்களின் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு வசதிகளை வழங்குகின்றது. மாத்தறை பொது மருத்துவமனை மாத்தறை நகர மத்தியில் வரையறுக்கப்பட்ட இடவசதியுடன் அமைந்துள்ளமையினால் இது கடும் இடப்பற்றாக்குறையுடன் காணப்படுவதோடு, அதனை விரிவுபடுத்தும் சாத்தியமும் வரையறுக்கப்பட்டதாகும். அதேபோன்று மாத்தறை, கொடகம பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள கொரிய - இலங்கை நட்புறவு மருத்துவமனையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதன்பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மாத்தறை பொது மருத்துவமனையிலுள்ள தாய், சேய் பிரிவுகளை மாத்தறை, கொடகம பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள கொரிய - இலங்கை நட்புறவு மருத்துவமனையில் தாபிப்பபதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொரிய - இலங்கை நட்புறவு மருத்துவமனையில் புதிய காவறைத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் பொருட்டு 8.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட நன்கொடையொன்றை கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.
|