• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யுத்தத்தினால் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு செயற்கை உடல் உறுப்புகளை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக றாகம "ரணவிரு செவன" மனையிடத்தில் இரண்டு மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
- றாகம "ரணவிரு செவன" வில் நடாத்திச் செல்லப்படும் செயற்கை உடல் உறுப்புக்களை உற்பத்தி செய்யும், இணைக்கும் பிரிவினால் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக செயற்கை உறுப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த பிரிவின் ஊடாக பல்வேறுபட்ட உடல் உறுப்புகளைச் செய்துகொள்வதற்காக அங்கவீனமுற்ற படைவீரர்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் தற்போது பதிவுசெய்து கொண்டுள்ளனர். இந்த செயற்கை உடல் உறுப்புக்களை உற்பத்தி செய்யும், இணைக்கும் பிரிவு மிகக்குறைந்த வசதிகளின் கீழ் நடாத்திச் செல்லப்படுவதோடு, இதற்குத் தீர்வொன்றாக அத்தியாவசிய அடிப்படை வசதிகளுடன்கூடிய இரண்டு (02) மாடிக் கட்டடமொன்றை 81.43 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் றாகம "ரணவிரு செவன" மனையிடத்தில் நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.