• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சுயாதீனமான மையப்படுத்தப்பட்ட பெறுகை நிறுவனமொன்றைத் தாபித்தல்
- அரசாங்கத்தின் பெறுகை நடவடிக்கையினுள் நிகழும் தேவையற்ற காலதாமதம் மற்றும் விரையம் என்பவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும் பெரிய அளவில் பெறுகை நடவடிக்கைகளைச் செய்யும் போது கிடைக்கும் நலன்கள், பொருட்களின் தரம், விலைக்கு ஏற்ற பெறுமதியைப் பெற்றுக் கொள்ளல் போன்ற விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அரசாங்க நிறுவனங்களுக்குப் பொதுவாகத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பெறுகை நோக்கங்களுக்காக சுயாதீனமான மையப்படுத்தப்பட்ட பெறுகை நிறுவனமொன்றை உருவாக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பெறுகை நடவடிக்கை களுக்குரிய பல்வேறுபட்ட துறைகளில் நிபுணத்துவம் மிக்க ஐந்து (05) உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனமான மையப்படுத்தப்பட்ட பெறுகை நிறுவனமொன்றை உருவாக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.