2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூக பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி அமைப்பிடமிருந்து 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட எடுத்தல் உரிமை தொழில்முயற்சி கடன்தொகையொன்றை பெற்றுக் கொள்தல் - சமூகத்தில் வறுமை மற்றும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு நலன்களை வழங்கும் பொருட்டு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் சமமான தன்மை, வினைத்திறன் மற்றும் வௌிப்படைத் தன்மை என்பவற்றை மேம்படுத்தும் பொருட்டு, “சமூக பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டம் 2017 - 2022” நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான கடன் வசதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சமவாயத்தினால் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட எடுத்தல் உரிமை தொழில்முயற்சி கடன்தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்காக உலகவங்கியுடன் நிதி உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |