2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பன்னல - மாகந்துர - குளியாபிட்டிய ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - குருநாகல் மாவட்டத்தில் பன்னல பிரதேசம், மாகந்துர பிரதேசத்தில் ஒரு பகுதி மற்றும் குளியாபிட்டிய (கிழக்கு மற்றும் மேற்கு) மற்றும் உடுபத்தாவ பிரதேச செயலகப் பிரிவின் ஒரு பகுதி என்பவற்றைத் தழுவும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ள உத்தேச பன்னல - மாகந்துர - குளியாபிட்டிய ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் சுமார் 112,000 பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|