• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவல் தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் 2016-2018 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள்
- தகவல் தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப அறிவை விருத்தி செய்வதற்காக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் "e-கிராம உத்தியோகத்தர் கருத்திட்டம்" மற்றும் "இணைய கருவிகளின் பாவனையை விருத்தி செய்தல் உட்பட புத்தாக்கங்கள் பொருட்டு பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், இளைய தலைமுறை தொழில்முயற்சியாளர்களை அறியச்செய்விக்கும் பொருட்டிலான "இணைய கருவிகள் கருத்திட்டம்" என்னும் இரண்டு கருத்திட்டங்களை முறையே 662 மில்லியன் ரூபா மற்றும் 133 மில்லியன் ரூபா கொண்ட மதிப்பீட்டுச் செலவில் 2016-2018 ஆண்டினுள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.