2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய கட்டடத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்தல் - கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் பல்வேறுபட்ட காரணங்களினால் இந்த கருத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த, வினைத்திறன் மிக்க மற்றும் பயனுள்ள சேவையொன்றை கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊடாக வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் இந்த பொலிஸ் நிலைய கட்டடத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்யும் கருத்திட்டத்தை 2017-2019 காலப்பகுதிக்குள் 153.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|