2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சருவதேச விளையாட்டு பயிற்சிப் பட்டறை, கண்காட்சி மற்றும் களியாட்ட விழாவினை ஒழுங்கு செய்தல் - இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 07 விளையாட்டுக்களை சருவதேச ரீதியில் மேலும் மேம்படுத்தும் நோக்கில், அதற்காக வெளிநாட்டு பயிற்சியாளர்களின் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்வதற்கும் சருவதேச விளையாட்டு வீரர்களுடன் இலங்கை விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளை நடாத்துவதன் மூலம் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் விளையாட்டு மற்றும் அதுசார்ந்த உள்நாட்டு, சருவதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் விளையாட்டுப் பயிற்சி பட்டறை, கண்காட்சி மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வீரர்கள் சுமார் 8,000 பேர்கள் கலந்து கொள்ளவுள்ள விளையாட்டு விழாவொன்றை 2017 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டினுள் கொழும்பு காலி முகத்திடலில் நடாத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக இந்த பயிற்சி பட்டறை கண்காட்சி மற்றும் விழாவினை ஒழுங்கு செய்யும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் தலைமையில் வழிப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துவது சம்பந்தமாக மலேசிய கம்பனியொன்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துக் கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றி கொள்வதற்கு அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்குமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|