2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீதிமன்ற தண்டப்பணங்கள் மற்றும் காணி உடைமையாக்கல் என்பன மீது அறவிடப்படும் முத்திரை கட்டணங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கிடைப்பதை முறைப்படுத்துதலும் துரிதப்படுத்துதலும் - உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார பிரதேசங்களில் நீதிமன்ற தண்டப்பணங்கள் மற்றும் காணி உடைமையாக்கல் சார்பில் எழுதி உறுதிப்படுத்தப்படும் உறுதிகளின் மீது அறவிடப்படும் முத்திரைக் கட்டணங்களின் மூலம் சேர்க்கப்படும் வருமானம் குறித்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள வழிமுறையை வினைத்திறன் மிக்கதாக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 19 ஆம் பிரிவைத் திருத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|