2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் சிறுவர்களுக்கான தேசிய செயற்றிட்டம் - 2016 - 2020 - இலங்கையில் சிறுவர்களின் முழுமையான அபிவிருத்தியை உறுதி செய்யும் விதத்திலும் அவர்களிடத்தில் காணப்படும் ஆற்றல் மற்றும் திறமைகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்குமான வசதியினை ஏற்பாடு செய்யும் விதத்தில் சிறுவர்கள் அனைவரினதும் உரிமைகளை பாதுகாத்து அவர்களுடைய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பொருத்தமான, பாதுகாப்பான அதற்கு உதவுகின்ற சூழலொன்றை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு, இதற்கு நேரடியாக தொடர்புடைய கல்வி, சுகாதாரம் நீதி, தொழில், ஊடகம், நீர்வழங்கல் போன்ற விடயங்களுக்குப் பொறுப்பான பிரதான அமைச்சுக்களும் நிறுவனங்களும் இணைந்து வரைந்துள்ள இலங்கையின் சிறுவர்களுக்கான தேசிய செயற்றிட்டத்தை (2016 - 2020) நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக உரிய தரப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் விதத்தில் தேசிய வழிப்படுத்தல் குழுவொன்றைத் தாபிப்பதற்குமாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |