• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின் உற்பத்தியின் போதும் மின்சார பாவனையின் போதும் வெளியேற்றப்படும் வாயுக்களை மட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் பொருத்தமான நடவடிக்கையின் பொருட்டான கருத்திட்டம்
- உலகளாவிய சீதோஷ்ண நிலை அதிகரித்து செல்வதை அடுத்த நூற்றாண்டில் இரண்டுபாகை செல்சியசுக்கு குறைந்த மட்டத்தில் பேணுவதற்கு உலக தலைவர்களினால் 2015 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட பரிஸ் உடன்படிக்கையின் மூலம் உடன்பாடு காணப்பட்டுள்ளது. பச்சைவீட்டு வாயுக்களை வெளியேற்றும் பிரதான நாடுகளான சீனா (20.08%), ஐக்கிய அமெரிக்க குடியரசு (17.89%), ரஷ்யா / இந்தியா / யப்பான் / கனடா (கூட்டாக 17.34%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையினால் வெளியேற்றப்படும் பச்சைவீட்டு வாயு அளவு உலகளாவிய பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தின் 0.05 சதவீதம் மாத்திரமாகும். ஆயினும் 2030 ஆம் ஆண்டளவில் வெளியேற்றப்படும் பச்சைவீட்டு வாயு அளவு 2010 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட அளவிலிருந்து 20 சதவீதம் வரை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைவாக உலக சுற்றாடல் வசதிகள் பற்றிய நிறுவனம் (GEF), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), தனியார்துறை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு இலங்கையின் பங்களிப்பை நடைமுறைப்படுத்தல் பற்றிய மேற்பார்வை மற்றும் அறிக்கையிடல் கட்டமைப்பொன்றை வகுத்தமைக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.