• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கோல்டன் கீ கிறடிற் காட் கம்பனி லிமிட்டெட் நிறுவனத்தில் பாதுகாப்பு வைப்பாளர்களுக்கான மீள் கொடுப்பனவு
- அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு உயர்நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையின் கீழ் கோல்டன் கீ கிறடிற் காட் கம்பனி லிமிட்டெட் சார்பில் முதற் கட்டமாக 544.3 மில்லியன் ரூபாவும் இரண்டாம் கட்டம் சார்பில் 3,945.6 மில்லியன் ரூபாவும் பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூன்றாவதும் இறுதியுமான கட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய 4,055.1 மில்லியன் ரூபாவை கட்டம் கட்டமாக இலங்கை மத்திய வங்கிக்கு விடுவிப்பதற்கும் கோல்டன் கீ கிறடிற் காட் கம்பனி லிமிட்டெட் நிறுவனததினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் சொத்துக்களை கலைத்து மூடுவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்கும் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பொதுத் திறைசேரிக்கு மீண்டும் வழங்குவதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.