2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அநுராதபுரம் மாகாண ஆயுள்வேத மருத்துவமனையின் மூன்றாம் மாடி கட்டட வேலைகளை பூர்த்தி செய்தல் - வடமத்திய மாகாணத்திலுள்ள பெரிய ஆயுள்வேத மருத்துவமனையானது அநுராதபுரம் மாகாண ஆயுள்வேத மருத்துவ மனையாகும். இந்த மருத்துவமனையின் கட்டணம் அறவிடப்படும் காவறைகள் அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டு (02) மாடிகளின் வேலைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆயுள்வேத சிகிச்சைகளைப் பெறுவதற்கு பாரிய அளவில் பொது மக்கள் விரும்பும் போக்கு தற்போது காணக்கிடைக்கின்றதோடு, பொது நோயாளர் காவறைகளுக்கு மேலதிகமாக இந்த மருத்துவமனையில் தற்போதுள்ள 08 கட்டணம் செலுத்தும் அறைகளுக்கும்கூட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளர்களின் அதிகூடிய கேள்வி உருவாகியுள்ளது. இதற்கமைவாக 10 அறைகளைக் கொண்டவாறு திட்டமிடப்பட்டுள்ள அநுராதபுரம் மாகாண ஆயுள்வேத மருத்துவமனையின் கட்டணம் செலுத்தும் காவறைத் தொகுதியின் மூன்றாம் மாடிக்கான வேலைகளை 30 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் பூர்த்தி செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |