2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாலபேயில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு புதிய ஆய்வுகூட கட்டடமொன்றை நிருமாணித்தல் - இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளின் வினைத்திறனையும் விளைவுபெருக்கத்தையும் அதிகரிப்பதற்காக அதன் ஆய்வுகூட சேவைகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக இந்த நிறுவனத்தின் ஆய்வுகூட சேவைப் பிரிவை தாபிப்பதற்காக மாலபே தகவல் தொழில்நுட்ப பூங்காவில் மூன்று (03) ஏக்கர் காணித் துண்டை 168 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்வதற்கும் உரிய நிருமாணிப்பு பணிகளை 550 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்குமாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |