• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவசர அனர்த்த நிலைமைகள் காரணமாக சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்களை மதிப்பிடுதல்
- அவசர அனர்த்த நிலைமைகளின் போது நிகழ்ந்துள்ள சேதங்களுக்கு நிவாரணம் வழங்கும் போது உரிய வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளை துரிதமாக செய்வதற்கு தேவையான பயிற்றப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் போதுமான அளவில் இல்லாமை அனர்த்த நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் நிலவுவதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இதற்கு மாற்று வழியாக தற்போது ஓய்வுபெற்றுள்ள பயிற்றப்பட்ட 30 தொழினுட்ப உத்தியோகத்தர்களை மூன்று (03) மாத காலத்திற்கு பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் இதன் மூலம் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட ஆயுத களஞ்சிய வெடி விபத்து, 2016 மே மாதம் கேகாலை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் 2016 மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு துரிதமாக நட்டஈடு வழங்கி முடிக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.