• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹாலிஎல மற்றும் பதுளை பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிருமாணிப்பதற்கு நிவாரணம் வழங்குதல்
- 2014 ஆம் ஆண்டில் ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் ரில்பொல உட்பட ஏனைய பிரதேசங்களிலும் பதுளை பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக முழுமையாக 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த வீடுகளை மீள நிருமாணிப்பதன் சார்பில் குடும்பம் ஒன்றுக்கு 1,250,000/- ரூபா வீதம் வழங்குவதற்கும் அதற்குத் தேவையான 30 மில்லியன் ரூபாவை குறித்தொதுக்கிக் கொள்வதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.